Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸ் கட்சிக்கு போன் பே நிறுவனம் எச்சரிக்கை.. என்ன காரணம்?

Webdunia
வியாழன், 29 ஜூன் 2023 (16:06 IST)
காங்கிரஸ் கட்சி தங்களது லோகோவை பயன்படுத்தி போஸ்டர் அடித்துள்ளதாக போன் பே நிறுவனம் அக்கட்சிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
மத்திய பிரதேசம் மாநிலத்தில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியை போஸ்டர் யுத்தம் நடத்தி வருகிறது. 
 
அதில் காங்கிரஸ் கட்சியின் போஸ்டரில் போன் பே நிறுவனத்தின் லோகோவை பதிவு செய்து இங்கே ஐம்பது சதவீதம் கமிஷன் செலுத்தி உங்களது வேலையை முடித்துக் கொள்ளலாம் என்று எழுதப்பட்டுள்ளது 
 
இதற்கு போன் பே நிறுவனம் தனது ட்விட்டரில் கூறி இருப்பதாவது: ’எந்த ஓர் அரசியல் கட்சியோ அல்லது அரசியல் சாராத மூன்றாவது நபர்களோ யாரும் எங்களது லோகோவை அங்கீகாரம் இல்லாமல் பயன்படுத்தக் கூடாது. 
 
போன் பே லோகோ எங்கள் நிறுவனத்தின் பதிவு செய்யப்பட்ட வணிக முத்திரையாகும். ‘போன் பே’-யின் அறிவுசார் சொத்து உரிமைகளை அங்கீகாரம் இல்லாமல் பயன்படுத்துபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். 
 
எங்கள் நிறுவனத்தின் பிராண்ட் மற்றும் லோகோவுடன் இருக்கும் போஸ்டர்களை நீக்கும்படி மத்தியப் பிரதேச காங்கிரஸை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்"
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments