Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பி.எப்.ஐ. அமைப்பின் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும்: அமைச்சரின் அதிரடி அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 30 செப்டம்பர் 2022 (13:23 IST)
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என கர்நாடக மாநில அமைச்சர் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
சமீபத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்புக்கு 5 ஆண்டுகள் மத்திய அரசு தடை விதித்தது என்பதும் இதனை அடுத்து அந்த அமைப்பு கலைக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக மாநில காவல் துறை அமைச்சர் ஞானேந்திரா, ‘பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு ஆதரவாக யார் குரல் கொடுத்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த அமைப்பின் சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார் 
 
மேலும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் சொத்துக்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம் என்றும் அந்த அமைப்புக்கு கர்நாடக மாநிலத்தில் எவ்வளவு சொத்துக்கள் இருக்கிறது என்பது குறித்த தகவலை சேகரித்து வருகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்
 
இந்த தகவல் அனைத்தும் சேகரித்த பிறகு அனைத்து சொத்துக்களும் பறிமுதல் செய்யப்படும் என அமைச்சர் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments