Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த நாள் முதல் உயரும் பெட்ரோல், டீசல் விலை...? எவ்வளவு தெரியுமா??

Webdunia
புதன், 24 ஏப்ரல் 2019 (09:29 IST)
வாக்கு எண்ணிக்கை நாள்முதல் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்த மோடி அரசு திட்டமிட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் ஊடக பொறுப்பாளர் ரந்தீப் கர்ஜேவாலா தெரிவித்துள்ளார். 
 
கடந்த 6 மாதங்களாக கச்சா எண்ணெய்யின் விலை உயர்ந்துள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் விலையும் உயர்ந்தது. இதை தவைர்த்து அமெரிக்கா ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தத்தில் வெளியேறியதிலிருந்து அந்நாட்டிடம் இருந்து இறக்குமதியை மேற்கொள்ளக்கூடாது என இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில்,  காங்கிரஸ் கட்சியின் ஊடக பொறுப்பாளர் ரந்தீப் கர்ஜேவாலா கூறியதாவது, மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்குவதற்காக, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 23 ஆம் தேதி வரை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த வேண்டாம் என மோடி உத்தரவிட்டுள்ளார்.
 
மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நாளின் போது மாலையில் பெட்ரோல், டீசல் விலையை ரூ.5 முதல் ரூ.10 வரை உயர்த்தும் எண்ணத்தில் மத்திய அரசு உள்ளது. எல்லா விஷயத்தையும் துணிச்சலாக பேசும் மோடி, பெட்ரோல், டீசல் விலை உயர்வு விவகாரத்தில் மௌனம் காப்பது ஏன்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments