Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எம்.எல்.ஏவை காணவில்லை: பொதுமக்கள் போஸ்டரால் பரபரப்பு

Webdunia
ஞாயிறு, 23 ஜூன் 2019 (17:59 IST)
தங்கள் தொகுதி எம்.எல்.ஏவை கடந்த சில நாட்களாக காணவில்லை என தொகுதி மக்கள் போஸ்டர் அடித்து தொகுதி முழுவதும் ஒட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
பீகார் மாநிலத்தில் உள்ள வைஷாலி என்ற மாவட்டத்தில் ஹரிவன்ஸ்பூர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில மாதங்களாக கடுமையான தண்ணீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த கிராமத்தில்  மூளைக்காய்ச்சலால் 7 குழந்தைகள் இதுவரை உயிரிழந்துள்ளனர். ஆனால் இதுவரை இந்த பகுதியை அரசு அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் இந்த தொகுதி எம்.எல்.ஏ என யாரும் கண்டுகொள்ளவில்லை. இதனையடுத்து அந்த கிராமத்தில் பல்வேறு இடங்களில் தங்கள் தொகுதி எம்எல்ஏ ராஜ்குமார் ஷா அவர்களை காணவில்லை என்று குறிப்பிட்டு கிராமத்தினர் போஸ்டர் அடித்து ஒட்டினர்.
 
இதனை கேள்விப்பட்டு பதறிப்போன இந்த தொகுதியின் எம்.எல்.ஏவும் லோக் ஜன சக்தி கட்சியின் பிரமுகருமான  ராஜ்குமார் ஷா உடனே ஹரிவன்ஸ்பூர் கிராமத்திற்கு சென்றார். ஆனால் அவரை பார்த்ததும் அவருக்கு எதிராக கிராமத்தினர் கோஷம் எழுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

திருமணமான 10 நாளில் மனைவி கர்ப்பம்.. அதிர்ச்சியில் கணவர்.. இன்சூரன்ஸ் அதிகாரியின் காதல் விளையாட்டு..!

கமல்ஹாசன் ராஜ்யசபா எம்.பி.யாக பதவியேற்பு: மகள் ஸ்ருதிஹாசன் நெகிழ்ச்சி வாழ்த்து!

அடுத்த கட்டுரையில்
Show comments