Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிறுமிக்கு தூக்க மாத்திரை கொடுத்து வன்கொடுமை! கர்ப்பமாக்கிய மந்திரவாதி தர்ம அடி!

சிறுமிக்கு தூக்க மாத்திரை கொடுத்து வன்கொடுமை! கர்ப்பமாக்கிய மந்திரவாதி தர்ம அடி!
, புதன், 14 அக்டோபர் 2020 (12:37 IST)
தெலுங்கானாவில் உடல் நலக் குறைவான சிறுமிக்கு வைத்தியம் செய்வதாக கூறி கர்ப்பமாக்கிய போலி சாமியாருக்கு மக்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த். தன்னை மந்திரவாதி என்று கூறி கொண்ட அவர் பூஜைகள் மூலம் உடல் நல கோளாறுகளை சரிசெய்வதாக கூறி அங்குள்ள மக்களை ஏமாற்றி வந்துள்ளார். அவரை நம்பி உடல் நலமற்ற தங்கள் 15 வயது பெண் குழந்தையை சிகிச்சைக்கு அழைத்து வந்துள்ளனர் ஒரு தம்பதியர். மூன்று மாதங்கள் தொடர்ந்து பூஜைகள் செய்து வைத்தியம் செய்ய வேண்டும் என மந்திரவாதி சொல்லவும் இவர்களும் தினமும் சிறுமியை அழைத்து வந்துள்ளனர்.

ஒருநாள் திடீரென சிறுமிக்கு மிகவும் உடல் நலம் சரியில்லாமல் போனதால் மருத்துவமனை அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிறுமி கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியது பெற்றோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து சிறுமியிடம் விசாரித்ததில் மந்திரவாதி தினமும் தூக்க மாத்திரை கொடுத்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாகவும் கூறியுள்ளார்.

இதையறிந்து ஆத்திரத்துடன் சென்ற பொதுமக்கள் மந்திரவாதி பிரசாந்தை பிடித்து தர்ம அடி அடித்து சாலையில் இழுத்து சென்று போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். சிறுமி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார்? அழகிரி கூறுவது என்ன?