Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Wednesday, 2 April 2025
webdunia

இந்த மாட்டு சாண சிப் கதிரியக்கத்திலிருந்து காக்கும்! – காமதேனு ஆயோக் தலைவர்!

Advertiesment
National
, செவ்வாய், 13 அக்டோபர் 2020 (15:52 IST)
மாட்டு சாணத்தால் செய்யப்பட்டுள்ள தகடுகள் கதிரியக்கத்தை கட்டுப்படுத்துவதாக காமதேனு ஆயோக் தலைவர் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் கால்நடை அமைச்சகத்தின் கீழ் உள்ள ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக் பசுக்களை பராமரித்தல், பசுக்கள் சார்ந்த பொருட்களை தயாரித்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது பண்டிகை காலம் தொடங்குவதால் பசு மாட்டு சாண தயாரிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் ”காமதேனு தீபாவளி அபியான்” திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை தொடங்கி வைத்து மாட்டு சாண சிப் ஒன்றை அறிமுகப்படுத்தி பேசிய காமதேனு ஆயோக் தலைவர் வல்லபாய் கதிரியா “மாட்டு சாணம் கதிரியக்கத்திலிருந்து அனைவரையும் பாதுகாக்கும் திறன் கொண்டது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. கௌசத்வா சவாச் என்னும் இந்த மாட்டு சாண சிப் மூலமாக செல்போன் உள்ளிட்ட மின்னணு பொருட்களின் கதிர்வீச்சிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம்” என கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

Tecno Camon 16 எப்படி? பட்ஜெட் விலைக்கு செட் ஆகுமா??