Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆந்திரா துணை முதல்வராக பவன் கல்யாண் நியமனம்..!

Advertiesment
Pavan Kalayanam

Senthil Velan

, புதன், 12 ஜூன் 2024 (15:49 IST)
ஆந்திராவின் துணை முதல்வராக ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் நியமிக்கப்பட்டுள்ளார்.

175 தொகுதிகளைக் கொண்ட ஆந்திரமாநில சட்டமன்ற தேர்தலில் 164 தொகுதிகளில் வெற்றிபெற்று ஜெகன்மோகன் தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கூட்டணி வீழ்த்தி அமோக வெற்றி பெற்றது.
 
தெலுங்கு தேசம் கூட்டணியில் பாஜகவும், பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியும் இடம்பெற்றிருந்தது. ஆந்திராவில் இரண்டாவது பெரிய கட்சியாக பவன் கல்யாணி ஜனசேனா உருவெடுத்துள்ளது.

 
இதனிடையே கிருஷ்ணா மாவட்டத்திலுள்ள கேசரபள்ளி ஐ.டி. பூங்கா அருகே நடைபெற்ற பதவியேற்பு விழாவில் சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.  ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் உள்ளிட்ட 24 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இந்நிலையில் ஆந்திராவின் துணை முதல்வராக பவன் கல்யாண் நியமிக்கப்பட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் ஜூன் 18 வரை மழை தொடரும்! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!