Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடாளுமன்ற விவகாரம்: தவறுதலாக செய்யப்பட்ட சஸ்பெண்ட் திரும்ப பெறுவதாக அறிவிப்பு..!

Webdunia
வெள்ளி, 15 டிசம்பர் 2023 (07:57 IST)
நாடாளுமன்றத்தில் நேற்று 15 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் அதில் ஒருவர் நாடாளுமன்றத்துக்கு வராதவர் என்பது தெரிய வந்ததை அடுத்து அவருடைய சஸ்பெண்ட் திரும்ப பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக கூறி உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என நேற்று எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
 
இந்த நிலையில் கனிமொழி, ஜோதிமணி உள்பட 15 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 15 எம்பிகளில் எஸ் ஆர் பார்த்திபன் என்பவர் நேற்று நாடாளுமன்றத்துக்கு வரவில்லை என்று கூறப்பட்டது. 
 
இதனை அடுத்து பாராளுமன்றத்திற்கு வராத ஒருவரை எப்படி சஸ்பெண்ட் செய்யலாம் என கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் தற்போது அவரது சஸ்பெண்ட் திரும்ப பெறப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.1 லட்சம் வீட்டுக்கு அனுப்பினால் ரூ.5000 பரிமாற்ற வரி.. டிரம்ப் அதிரடியால் இந்தியர்களுக்கு பாதிப்பு..!

நேற்றைய உச்சத்திற்கு பின் இன்னும் மீண்டும் சரியும் பங்குச்சந்தை.. மதியத்திற்கு மேல் உயருமா?

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்.. மாணவர்களை விட மாணவிகள் 4.14% பேர் அதிகமாக தேர்ச்சி

டாஸ்மாக் மேலாண் இயக்குனர் வீட்டில் சோதனை.. அமலாக்கத்துறை அதிரடி..!

92 வயது நபர் டிஜிட்டல் அரெஸ்ட்.. ரூ.2.2 கோடி மோசடி.. டெல்லி போலீஸ் எடுத்த அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments