Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மாலையில் மட்டுமே நடைபெறும் லோக்சபா மழைக்கால கூட்டத்தொடர்: புதிய தகவல்

மாலையில் மட்டுமே நடைபெறும் லோக்சபா மழைக்கால கூட்டத்தொடர்: புதிய தகவல்
, புதன், 2 செப்டம்பர் 2020 (12:29 IST)
நாடாளுமன்ற லோக்சபா கூட்டத்தொடர் எப்பொழுதும் காலை 10 மணிக்கு ஆரம்பமாகும் நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக முதல் முதலாக மாலையில் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
லோக்சபா மழைக்கால கூட்டத்தொடர் செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 1ஆம் தேதி வரை நடைபெறும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த மழைக்கால கூட்டத்தொடர் மாலையில் மட்டுமே நடைபெறும் என்றும் செப்டம்பர் 15 முதல் நடைபெறும் இந்த கூட்டத்தொடர் மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரை தொடர்ந்து நடைபெற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் செப்டம்பர் 14ஆம் தேதி ஒரு நாள் மட்டும் காலை 9 மணி முதல் மதியம் ஒரு மணிவரை நடைபெறும் என லோக்சபா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
 
மேலும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் கேள்வி நேரம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்  லோக்சபா கூட்ட தொடர் முதல் முதலாக மாலையில் மட்டுமே நடைபெறும் என்ற அறிவிப்பை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதோடு, லோக்சபா உறுப்பினர்களுக்கு ஒரு புதிய அனுபவமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டிஸ்லைக்கா போடுறீங்க? இப்ப பாருங்க! – ஆப்சனை ஆஃப் செய்த பாஜக சேனல்!