Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நஷ்டத்துல இயங்க முடியாது! விற்பனையை நிறுத்திய பானாசோனிக்! - அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

Prasanth K
வெள்ளி, 27 ஜூன் 2025 (10:51 IST)

உலகம் முழுவதும் பிரபலமாக உள்ள ஜப்பானின் பானாசோனிக் நிறுவனம் இந்தியாவில் தனது குறிப்பிட்ட எலெக்ட்ரானிக் பொருட்கள் விற்பனையை இழுத்து மூடியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

ஜப்பானை சேர்ந்த பானாசோனிக் நிறுவனம் டிவி, ப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட வீட்டு எலெக்ட்ரானிக் பொருட்கள் தொடங்கி, அதிநவீன சினிமா கேமராக்கள் வரை ஏராளமான பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்தியாவில் ஹரியானாவில் அமைந்துள்ள பானாசோனிக் தொழிற்சாலையில் பல எலெக்ட்ரானிக் பொருட்கள் தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

 

இந்நிலையில் இந்தியாவில் ஃப்ரிட்ஜ் மற்றும் வாஷிங் மெஷின் தயாரிப்பு மற்றும் விற்பனையை நிறுத்துவதாக பானாசோனிக் அறிவித்துள்ளது. இந்திய சந்தையில் பானாசோனிக்கின் இந்த சாதனங்கள் குறைவான வரவேற்பையே பெற்றுள்ள நிலையில் நஷ்டத்தில் இயங்குவதை தவிர்க்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

மேலும் பானாசோனிக் இனி வீடு ஆட்டோமேஷன், ஏசி உள்ளிட்ட பிரிவுகளில் அதிக கவனம் செலுத்த உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் தயாரிப்பை நிறுத்தி இருந்தாலும் வாடிக்கையாளர் சேவை, சர்வீஸ் செய்து தருவது போன்ற இதர சேவைகள் தொடர்ந்து நடக்கும் என கூறப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏதோ பெருசா ப்ளான் பண்றாங்க! ரஷ்யா - வடகொரியா ரகசிய திட்டம்! - எச்சரிக்கும் தென்கொரியா!

ரயில் கட்டணம் உயர்வு உறுதி.. 1 கிமீ-க்கு எவ்வளவு? மத்திய அமைச்சர் தகவல்..!

சிவசேனா எம்பி டிரைவருக்கு ரூ.150 கோடி மதிப்பில் நிலம்.. தானமாக கிடைத்ததாக வாக்குமூலம்..!

பணம் வந்ததும் அக்கவுண்ட் க்ளோஸ்! 8.5 லட்சம் போலி வங்கி கணக்குகள்! - அதிர்ச்சியளிக்கும் சிபிஐ ரிப்போர்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments