Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிதம்பரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவது எப்போது ? – சிபிஐ தரப்புத் தகவல் !

Webdunia
வியாழன், 22 ஆகஸ்ட் 2019 (15:27 IST)
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள .சிதம்பரம் இன்று மாலைக்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாடுகளில் நிதியை பெறுவதற்கு அனுமதி வழங்கியதில் ரூ.305 கோடி அளவில் நிதி மோசடி நடந்ததாக எழுந்த புகாரில் சிதம்பரத்தின் மீது அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் சிதம்பரத்துக்கு முன் ஜாமீன் மறுக்கபப்ட்டதை அடுத்து அவர் நேற்றிரவு சிபிஐ- யால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்றிரவு முதல் சிபிஐ அலுவலகத்தின் கெஸ்ட் அவுஸில் "லாக்-அப் சூட் 3" இல் சிதம்பரம் வைக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு முதல் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நேற்றிரவு முதல் அவர் உணவு எதுவும் எடுத்துக்கொள்ள வில்லை என செய்திகள் வெளியாகியுள்ளன.

சிதம்பரம் எப்போது கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார் என்ற சந்தேகங்களுக்கு விடையளிக்கும் விதமாக இன்று மாலைக்குள் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் எடுக்கும் திட்டத்தில் சிபிஐ உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments