சிதம்பரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவது எப்போது ? – சிபிஐ தரப்புத் தகவல் !

Webdunia
வியாழன், 22 ஆகஸ்ட் 2019 (15:27 IST)
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள .சிதம்பரம் இன்று மாலைக்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாடுகளில் நிதியை பெறுவதற்கு அனுமதி வழங்கியதில் ரூ.305 கோடி அளவில் நிதி மோசடி நடந்ததாக எழுந்த புகாரில் சிதம்பரத்தின் மீது அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் சிதம்பரத்துக்கு முன் ஜாமீன் மறுக்கபப்ட்டதை அடுத்து அவர் நேற்றிரவு சிபிஐ- யால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்றிரவு முதல் சிபிஐ அலுவலகத்தின் கெஸ்ட் அவுஸில் "லாக்-அப் சூட் 3" இல் சிதம்பரம் வைக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு முதல் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நேற்றிரவு முதல் அவர் உணவு எதுவும் எடுத்துக்கொள்ள வில்லை என செய்திகள் வெளியாகியுள்ளன.

சிதம்பரம் எப்போது கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார் என்ற சந்தேகங்களுக்கு விடையளிக்கும் விதமாக இன்று மாலைக்குள் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் எடுக்கும் திட்டத்தில் சிபிஐ உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

AI அனைத்து வேலைகளையும் செய்யும், இனிமேல் மனிதர்களுக்கு சுதந்திரம் தான்! எலான் மஸ்க்:

செம்பரப்பாக்கம் ஏரியை திறக்க என்னை ஏன் கூப்பிடவில்லை: செல்வப்பெருந்தகை ஆவேசம்..!

டெல்லி தாஜ் ஹோட்டலில் சர்ச்சை: 'பத்மாசனம்' போட்டு அமர்ந்த பெண்ணுக்கு அவமதிப்பு?

காலையில் குறைந்த தங்கம் மாலையில் மீண்டும் குறைவு.. இன்று ஒரே நாளில் ரூ.3680 சரிவு..!

இன்றிரவு சென்னை உள்பட 26 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments