Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முன் ஜாமீன் பெற்றார் ப.சிதம்பரம் - உத்தரவிட்ட உச்சநீதிமன்றம்

முன் ஜாமீன் பெற்றார் ப.சிதம்பரம் - உத்தரவிட்ட உச்சநீதிமன்றம்
, வெள்ளி, 23 ஆகஸ்ட் 2019 (13:30 IST)
முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அமலாக்கத்துறைக்கு எதிராக தொடர்ந்த வழக்கில் முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். சிபிஐ வழக்கு திங்கட்கிழமை விசாரணைக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

2007ல் நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியா அந்நிய முதலீட்டை பெற அனுமதி வழங்கியதாகவும், அதற்கு லஞ்சமாக பணம் பெற்றதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. அதேசமயம் சட்ட விரோத பண பரிவர்த்தனை குறித்த வழக்கை அமலாக்கத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

தான் கைது செய்யப்படலாம் என உணர்ந்த ப.சிதம்பரம் முன்னரே முன் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு அளித்தார். அவர் மனு உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. மீண்டும் ஒரு மேல் முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அந்த மனுவின் மீதான விசாரணை தொடங்கப்படும் முன்னே ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டார்.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்நிலையில் ப.சிதம்பரத்தின் மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் அமலாக்கத்துறைக்கு எதிரான ப.சிதம்பரத்தின் முன் ஜாமீனை அங்கீகரித்துள்ளார்கள். இந்த வழக்கு தொடர்பான விசாரணை ஆகஸ்டு 26ம் தேதி நடைபெறும் எனவும் அதுவரை ப.சிதம்பரத்தை கைது செய்யக்கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளனர். மேலும் சிபிஐ வழக்கின் விசாரணை எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் இந்த இரு வழக்குகளுமே திங்கட்கிழமை விசாரணைக்கு வர இருக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எம்.பி.பதவி ஏற்றார் மன்மோகன் சிங்:போட்டியின்றி தேர்வு