Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓவர் வெயில் ...மாட்டுச் சாணியை காரில் மெழுகிய நபர் : வைரலாகும் வீடியோ

Webdunia
செவ்வாய், 21 மே 2019 (18:26 IST)
கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்குமென்றாலும் இவ்வருடம் சற்று அதிகமாகவே வெயில் கொளுத்திவருகிறது. 
வேகாத வெயிலில் நடந்தும்வ் வேர்க்க விறுவிறுக்க  பேருந்தில் பயணம் போகிறவர்களுக்குத்தான் அதிக புளுக்கம் என்றால்...காரில் போகிறவர்களுக்கும் வெயில் தாக்கம் அதிகமாகவே இருப்பதாகவே பலரும் கூறி வருகிறார்கள்.
 
அதுபோல் தற்போது குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. 
ஆம்! மேற்சொன்ன பகுதியில் வசித்து வரும் ஒரு நபர் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது என்பதற்காக தனது காரை சாணத்தால் மெழுகி இருக்கிறார்.
 
பொதுவாக தரையில் மெழுகும் சாணத்தை தனது சொகுசு காரில் மெழுகி இருக்கிறார். இதைப் படம்பிடித்து தனது பேஸ்புக் பக்கத்தில் பகிரவே தற்போது இது வைரலாகிவருகிறது.
மேலும் ரூபேஷ் 45 டிகிரி வெப்பநிலையில் தனது கார் வெப்பமடையாமல் இருப்பதற்காக தந்து காரை சாணத்தால் மெழுகியுள்ளார்.
 
சீஜல் ஷா என்ற பெண்மணியும் தனது காரை சாணத்தால் மெழுகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments