Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சமாதானத்திற்கு கொண்டு வரப்பட்ட டீ.. மறுத்த சஸ்பெண்ட் எம்.பி.க்கள்!!

Advertiesment
சமாதானத்திற்கு கொண்டு வரப்பட்ட டீ.. மறுத்த சஸ்பெண்ட் எம்.பி.க்கள்!!
, செவ்வாய், 22 செப்டம்பர் 2020 (09:36 IST)
நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள் பாராளுமன்ற வளாகம் முன்பு 2வது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். 
 
மாநிலங்களவையில் நேற்றுமுந்தைய நாள் ஒப்புதலுக்கு கொண்டு வரப்பட்ட விவசாய மசோதாவை எதிர்த்து எதிர்க்கட்சி எம்பிகள் பேசி வந்தனர். இந்நிலையில் தங்கள் கருத்துகளை ஏற்று மசோதாவில் மாற்றங்கள் செய்யவில்லையென எம்.பிக்கள் புகார் தெரிவித்து பாராளுமன்ற விதிகள் புத்தகத்தை கிழித்து அமளியில் ஈடுபட்டனர்.
webdunia
அதை தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட 8 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தாங்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த எம்பிக்கள் பாராளுமன்ற வளாகத்திலேயே தர்ணாவில் ஈடுபட்டனர். விடிய விடிய பாராளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்திய அவர்கள் சஸ்பெண்டை ரத்து செய்யும் வரை போராடுவோம் என தெரிவித்துள்ளனர்.
 
இந்நிலையில் 2 வது நாளாக தர்ணா செய்யும் 8 எம்.பிக்களுக்காக டீ கொண்டுவந்தார் மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ். ஆனால் ஹரிவன்ஷ் கொடுத்த டீயை சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்கள் வாங்க மறுத்துவிட்டனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐநா சபை அமைப்பையே மாத்தணும்! – பிரதமர் மோடி கருத்து!