Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒவ்வொரு இளைஞர்களும் 4 குழந்தைகள் பெற்று கொள்ள வேண்டும்: பாஜக அமைச்சர்..

ஒவ்வொரு இளைஞர்களும் 4 குழந்தைகள் பெற்று கொள்ள வேண்டும்: பாஜக அமைச்சர்..
, திங்கள், 3 ஏப்ரல் 2023 (14:01 IST)
நமது நாட்டின் ஒவ்வொரு இளைஞர்களும் நான்கு குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாஜக அமைச்சர் ஒருவர் பேசியுள்ளார். 
 
நமது மக்கள் தொகையை கட்டுப்படுத்த நாம் முயற்சி செய்யக் கூடாது என்றும் நமது இளைஞர்கள் ஒன்றல்ல இரண்டல்ல குறைந்தது நான்கு குழந்தைகளையாவது பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் நிகழ்ச்சி ஒன்றில் உத்தர பிரதேச மாநில அமைச்சர் ரகுநாத் சிங் பேசியுள்ளார்.
 
உங்களால் அந்த குழந்தைகளை வளர்த்து பராமரிக்க முடியாவிட்டால் எங்களிடம் கொடுங்கள் நாங்கள் அவர்களை வளர்த்து பாதுகாத்துக் கொள்கிறோம் என்றும் அவர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
கடந்த காலங்களில் செய்த தவறுகள் காரணமாக பல ஆண்டுகள் அடிமையாக இந்தியர்கள் இருந்து வருகிறார்கள் என்றும் இனி மேலும் அது போன்ற தவறுகளை செய்ய வேண்டாம் என்றும் பாகிஸ்தான் சீனா நாடுகளுக்கு நாம் நல்ல பாடம் கற்றுக் கொண்டிருக்கிறோம் என்றும் அவர் பேசினார். இந்தியாவின் நிறுவப்பட்ட ராமராஜ்யம் ஒருவராலும் நிறுத்த முடியாது என்றும் அவர் கூறினார்.
 
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தவறாக அவுட் கொடுத்த அம்பயரை கத்தியால் குத்தி கொலை செய்த பேட்ஸ்மேன்: ஒடிசாவில் பரபரப்பு..!