திமுக கோரிக்கை எதிரொலி: எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் ஒத்திவைப்பு!

Webdunia
திங்கள், 5 ஜூன் 2023 (07:35 IST)
திமுகவின் கோரிக்கை காரணமாக எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற பொது தேர்தலில் பாஜகவுக்கு எதிராக ஒரு மிகப்பெரிய அணியை உருவாக்க எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் ஜூன் 12ஆம் தேதி நடைபெற இருந்தது. 
 
இந்த நிலையில் திமுக உள்ளிட்ட ஒரு சில கட்சிகள் இந்த ஆலோசனை கூட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. ஒடிசாவில் நடைபெற்ற ரயில் விபத்தின் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதால் ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கை விடப்பட்டது. 
 
இதனை அடுத்து திமுக உள்ளிட்ட கட்சிகளின் கோரிக்கையை ஏற்று ஜூன் 12-ம் தேதிக்கு பதிலாக ஜூன் 23ஆம் தேதி எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்றும் இந்த கூட்டம் தலைநகர் பாட்னாவில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த கூட்டத்தில் பாஜகவுக்கு எதிராக இந்தியாவில் உள்ள அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்று சேர்ந்து தேர்தலை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அன்புமணி தான் பாமக தலைவர்.. மாம்பழம் சின்னம் முடக்கப்படலாம்: தேர்தல் ஆணையம்..!

புதுச்சேரியில் விஜய் ரோட் ஷோ!.. சொந்த ஊரில் காரியம் சாதிக்க முடியாத புஸ்ஸி ஆனந்த்..

தனி நீதிபதி தீர்ப்பு சட்டம்-ஒழுங்கைப் பாதித்தது: திருப்பரங்குன்றம் வழக்கில் தமிழக அரசு வாதம்

புதைக்கப்பட்ட இரண்டே நாட்களில் சிறுமியின் உடல் மாயம்.. தஞ்சை அருகே பரபரப்பு..!

மனைவிக்கு கள்ளத்தொடர்பு இருப்பதாக சந்தேகம்.. 14 வயது மகளின் கழுத்தை பிளேடால் அறுத்த கணவர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments