Publish Date: Tue, 03 Aug 2021 (10:44 IST)
Updated Date: Tue, 03 Aug 2021 (12:53 IST)
பாஜக எம்பிக்களின் ஆலோசனை கூட்டத்தில் மோடி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை அவமதிப்பதாக குற்றமும்சாட்டினார்.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கி இன்றுடன் 11 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இரு அவைகளிலும் எதிர்கட்சிகள் தொடர்ந்து பெகாசஸ் விவகாரத்தை விவாதிக்க கோரி கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் ஒவ்வொரு நாளும் அமளி காரணமாக நாடாளுமன்ற அவைகள் ஒத்திவைக்கப்படுவது தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் எதிர்க்கட்சிகளை சமாளிப்பது குறித்த பாஜக எம்பிக்களின் ஆலோசனை கூட்டத்தில் மோடி பின்வருமாறு பேசினார், தினமும் முழக்கங்களை எழுப்பி நாடாளுமன்றத்தை செயல்படவிடாமல் எதிர்க்கட்சிகள் தடுக்கின்றன. எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை அவமதிப்பதாக குற்றமும்சாட்டினார்.