Webdunia - Bharat's app for daily news and videos

Install App

12 நாள் திட்டம்.. 13வது நாள் தான் தாக்குதல்: ‘ஆபரேசன் சிந்தூர்’ குறித்த ஆச்சரிய தகவல்..!

Mahendran
புதன், 7 மே 2025 (10:43 IST)
இந்திய ராணுவம் 12 நாட்கள் பக்காவாக திட்டமிட்டு, 13-வது நாள் தாக்குதல் நடத்தியது தான் "ஆபரேஷன் சிந்தூர்" என தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
ஜம்மு காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர், பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்பின் முகாம்களை அழிக்க இந்திய ராணுவம் முடிவு செய்தது. அப்பாவி சுற்றுலாப் பயணிகளில் மரணத்திற்கு பழிவாங்க, பதிலடி கொடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க ராணுவம் மற்றும் முப்படை தளபதிகள் ஆலோசனை செய்தனர்.
 
இந்த நிலையில் தான் "ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில், பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளின் இலக்குகளை குறி வைத்து தாக்க 12 நாட்கள் திட்டமிடப்பட்டதாகவும், 13-வது நாள் தாக்குதல் நடைபெற்றதாகவும் பாதுகாப்புத் துறையிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
எதிரி நாட்டின் உளவுத்துறை அமைப்புகளையும், பாதுகாப்பு அமைப்புகளையும் முழுமையாக குழப்பத்தில் வைத்திருந்த இந்தியா, தொடர்ந்து தனது யுத்திகளை மாற்றி 12 நாட்கள் கவனமாக திட்டமிட்டு "ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலை வெற்றிகரமாக நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனைவி, இரு மகள்கள் மீது கோபம்.. 3 கோடி ரூபாய் சொத்துக்களை கோவிலுக்கு எழுதி வைத்த நபர்.. குடும்பத்தினர் அதிர்ச்சி..!

தமிழகத்தில் என்ன நடக்கிறது? நிதி நெருக்கடி நிலவுகிறதா? உயர்நீதிமன்ற நீதிபதியின் சரமாறி கேள்விகள்..!

பஞ்சாயத்தாயா இது? ட்ரம்ப்பை மதிக்காமல் ஈரான் - இஸ்ரேல் மீண்டும் போர்! - ட்ரம்ப் ரியாக்‌ஷன் என்ன?

வாங்கிய கடனை கொடுக்க முடியவில்லை.. நண்பனிடம் மனைவியை விற்ற கணவன்..!

400 கிலோ யுரேனியத்தை ஈரான் மறைத்து வைத்துள்ளது: அமெரிக்கா அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments