Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் மோடி மட்டுமே வளர்ச்சியைக் கொடுக்க முடியும் - அமைச்சர் அமித்ஷா

Webdunia
வெள்ளி, 27 அக்டோபர் 2023 (17:33 IST)
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அடுத்த தேர்தலில் தெலங்கானா முதல்வராக பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவராக இருப்பார் என்று தெரிவித்துள்ளார்.

தெலங்கானா மாநிலத்தில் முதல்வர் சந்திரசேகரராவ் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.

இம்மாநிலத்தில் அடுத்த மாதம் 30 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக தெலங்கானா ராஷ்டிர சமிதி, பாஜக, காங்கிரஸ், உள்ளிட்ட கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் உள்ளனர்.

இந்த நிலையில், தெலங்கானா மாநிலத்தில் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அடுத்த தேர்தலில் தெலங்கானா முதல்வராக பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவராக இருப்பார் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், பாரத ராஷ்ட்ரிய சமிதி, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளாலும் தெலங்கானாவில் வளர்ச்சியைக் கொடுக்க முடியாது.  பிரதமர் மோடி மட்டுமே வளர்ச்சியைக் கொடுக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வழி விடாமல் சென்ற ஆட்டோ ஓட்டுநருக்கு நடுரோட்டில் அடி உதை.. இளம்பெண் மீது வழக்குப்பதிவு

இந்தில எங்க இருக்கு.. இங்கிலீஷ்லதானே இருக்கு! – குற்றவியல் சட்ட வழக்கில் மத்திய அரசின் குழப்ப விளக்கம்!

மீண்டும் ரூ.54,000ஐ கடந்தது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 520 ரூபாய் உயர்வு..!

கேரளாவில் பிறந்தாலும் வாழ வெச்சது நீங்கதான்! தமிழ்நாட்டுக்கு நல்லதே செய்வேன்! – பாஜக எம்.பி சுரேஷ் கோபி!

கர்ப்பிணிப் பெண்ணுக்கு வழங்கப்பட்ட சத்துணவில் இறந்த பாம்பு! அங்கன்வாடி மையத்தில் விசாரணை..!

அடுத்த கட்டுரையில்
Show comments