Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொரோனா பாதிப்பு குறித்த தகவல் அளிப்பதில் திடீர் மாற்றம்: மத்திய அரசு அறிவிப்பு

கொரோனா பாதிப்பு குறித்த தகவல் அளிப்பதில் திடீர் மாற்றம்: மத்திய அரசு அறிவிப்பு
, புதன், 6 மே 2020 (08:31 IST)
கொரோனா வைரஸ் நாடு முழுவதும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் தினந்தோறும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பது குறித்த தகவல்களை மத்திய அரசு காலையில் ஒரு முறையும் மாலையில் ஒரு முறையும் அறிவித்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த தகவலின் மூலம் நாட்டில் உள்ள அனைத்து மாநில மக்களும் கொரோனா பாதிப்பால் ஒவ்வொரு நாளும் எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்த தகவலை தினமும் இருவேளை அறிந்து வந்தனர். இந்த நிலையில் சற்று முன் மத்திய அரசு வெளியிட்ட தகவலின்படி இனிமேல் காலை, மாலை என இருவேளைகளில் கொரோனா பாதிப்பு குறித்த எண்ணிக்கை தகவல்கள் வெளி வராது என்றும் காலையில் காலையில் மட்டுமே வெளிவரும் என்றும் அறிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 
 
காலை, மாலை என இருவேளையும் மத்திய அரசுக்கு கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை வெளியிட்டு வந்தபோது நாள் ஒன்றுக்கு காலையில் எத்தனை பேர் மாலையில் எத்தனை பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்த தகவல்களை பொதுமக்கள் அறிந்து வந்தனர். இந்த நிலையில் நாள் ஒன்றுக்கு ஒரு முறை மட்டுமே அறிவிக்கப்படும் என்று அறிவிப்பு பொதுமக்களுக்கும் சுகாதாரத் துறையினர்களுக்கும் ஏமாற்றத்தை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தமிழக அரசு ஏற்கனவே தினந்தோறும் மாலை மட்டுமே கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை அளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இரண்டாவது நாளில் 197 கோடி வசூல்! – கல்லா கட்டும் மதுக்கடைகள்!