Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெங்காயத்தின் விலை குறைய தொடங்குகிறதா??

Arun Prasath
வெள்ளி, 4 அக்டோபர் 2019 (13:02 IST)
வெங்காய ஏற்றுமதிக்கு தடை உள்ளிட்ட கட்டுப்பாடுகளால் அதன் விலை குறைய தொடங்கியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

மழை காரணமாக வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்டதால், வெங்காயத்தின் விலை உயர்ந்து வந்தது. ஆனால் தற்போது வெங்காய ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகளால் அதன் விலை குறைய தொடங்கி விட்டதாக மத்திய நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ராம்விலாஸ், வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டதும், அதற்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதற்கும், நல்ல பலன் தர தொடங்கியுள்ளதாக கூறினார். மேலும் மத்திய அரசு, தற்போது 25 ஆயிரம், டன் வெங்காயம் கையிருப்பு இருப்பதாகவும், அதனை கொண்டு விலையை கட்டுக்குள் வைத்திருக்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார். இதனிடையே வெங்காயத்தின் விலை கடந்த வாரத்தில் கிலோவிற்கு 10 ரூபாய்க்கு மேல் குறைந்துள்ளதாக வெளியான தகவல் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேரள பாஜக தலைவர் அறிவிப்பு.. தமிழக தலைவர் அறிவிப்பு எப்போது?

சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதி இல்லை.. மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்..!

பஸ் ஓட்டிக்கொண்டே ஐபிஎல் மேட்ச் பார்த்த டிரைவர்.. டிஸ்மிஸ் செய்த நிர்வாகம்..!

சவுக்கு சங்கர் வீட்டுக்குள் புகுந்த ரவுடி கும்பல்? உதவிக்கு வராத போலீஸ்? - அண்ணாமலை கண்டனம்!

தி.நகர், ஆர்.கே.நகர் மேம்பாலங்கள் திறப்பது எப்போது? சென்னை மாநகராட்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments