Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெங்காயத்தின் விலை குறைய தொடங்குகிறதா??

Arun Prasath
வெள்ளி, 4 அக்டோபர் 2019 (13:02 IST)
வெங்காய ஏற்றுமதிக்கு தடை உள்ளிட்ட கட்டுப்பாடுகளால் அதன் விலை குறைய தொடங்கியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

மழை காரணமாக வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்டதால், வெங்காயத்தின் விலை உயர்ந்து வந்தது. ஆனால் தற்போது வெங்காய ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகளால் அதன் விலை குறைய தொடங்கி விட்டதாக மத்திய நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ராம்விலாஸ், வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டதும், அதற்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதற்கும், நல்ல பலன் தர தொடங்கியுள்ளதாக கூறினார். மேலும் மத்திய அரசு, தற்போது 25 ஆயிரம், டன் வெங்காயம் கையிருப்பு இருப்பதாகவும், அதனை கொண்டு விலையை கட்டுக்குள் வைத்திருக்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார். இதனிடையே வெங்காயத்தின் விலை கடந்த வாரத்தில் கிலோவிற்கு 10 ரூபாய்க்கு மேல் குறைந்துள்ளதாக வெளியான தகவல் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments