Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒமிக்ரான் தொற்றால் இந்தியாவில் முதல் நபர் உயிரிழப்பு

Webdunia
புதன், 5 ஜனவரி 2022 (17:25 IST)
ஒமிக்ரான் தொற்றால் இந்தியாவில் முதல் நபர் உயிரிழந்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில் இருந்து பரவியுள்ள ஒமிக்ரான் வேரியண்ட் உலக நாடுகளை மீண்டும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் ஒமிக்ரான் தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் ஒமிக்ரான் கண்டறியப்பட்ட நிலையில், இதுவரையிலான மொத்த கொரோனா பாதிப்புகள் 2,135 ஆக பதிவாகியுள்ளன. இதில் 828 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 1,307 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 இந்நிலையில், ஒமிக்ரான் தொற்றால் இந்தியாவில் முதல் நபர் உயிரிழந்துள்ளார்.

மத்திய சுகாதாரத்துறை ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார் என மத்திய சுகாதாரத்துறை இணைச்செயலாளர் லால் அகர்வால் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

தொடர் சரிவில் பங்குச்சந்தை.. ஜூன் 4க்கு பின்னராவது உயருமா?

தங்கம் விலை இன்று திடீர் உயர்வு.. ஒரே நாளில் ரூ.560 உயர்ந்ததால் அதிர்ச்சி..!

மே 18-20.. 3 நாட்களுக்கு மிக கனமழை: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை.. விஜய் பிறப்பித்த முக்கிய உத்தரவு..!

ஓடும் பேருந்தில் நடத்துனருக்கு நெஞ்சுவலி: பரிதாபமாக உயிரிழந்ததால் சோகம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments