பழைய, சிப் இல்லாத சாதாரண பாஸ்போர்ட்டுகள் எதுவரை செல்லும்: அதிகாரிகள் விளக்கம்..!

Mahendran
புதன், 19 நவம்பர் 2025 (10:21 IST)
மின்னணு சிப் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட்கள் இதுவரை இந்தியாவில் 80 இலட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
 
பழைய, சிப் இல்லாத சாதாரண பாஸ்போர்ட்டுகள் குறித்தும் அதிகாரிகள் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளனர். அதன்படி, அந்த பாஸ்போர்ட்டுகள் 2035 ஆம் ஆண்டு வரையில் அல்லது அவற்றின் காலாவதி தேதி எது முந்தையதோ அதுவரை செல்லுபடியாகும் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
 
இந்த இ-பாஸ்போர்ட் திட்டம் கடந்த ஆண்டு சோதனை முறையில் தொடங்கப்பட்டு, 2025 மே மாதம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இதுவரையில் இந்தியாவில் 80 லட்சம் பேருக்கும், வெளிநாடுகளில் 62 ஆயிரம் பேருக்கும் இ-பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. 
 
மேலும், இந்த புதிய பாஸ்போர்ட்டுகள் ஆள்மாறாட்டத்தை தடுக்கவும், தொலைந்து போனால் சிப்பில் உள்ள தகவல்களை முடக்கவும் உதவுகின்றன என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்குச்சாவடி அலுவலர்களின் ஊதியம் அதிரடி உயர்வு: தமிழக அரசு அரசாணை வெளியீடு

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.800 உயர்வு..!

பிரசாந்த் கிஷோர் நிலமைதான் விஜய்க்கும்!.. மறைமுகமாக சொன்ன தமிழிசை!...

இன்றும் நாளையும் கனமழை பெய்யும்.. வானிலை ஆய்வு மையம்.. சென்னையில் 3 நாட்களுக்கு பின் வெயில்..!

சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம்.. கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பக்தை பரிதாப பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments