Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அக்னிபாத் திட்டத்தால் வருத்தம் - ஒடிசாவில் இளைஞர் தற்கொலை!

அக்னிபாத் திட்டத்தால் வருத்தம் - ஒடிசாவில் இளைஞர் தற்கொலை!
, சனி, 18 ஜூன் 2022 (09:45 IST)
அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒடிசாவில் இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்திய ராணுவத்தின் முப்படைகளில் 4 ஆண்டுகால குறுகிய கால ராணுவ சேவை செய்வதற்கான “அக்னிபாத் திட்டம்” மத்திய அரசால் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர இளைஞர்கள், பெண்கள் 18வயது முதல் 21 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். வழக்கமான ராணுவ உடற்தகுதி நிர்ணயங்களே அக்னிபாத் திட்டத்தில் சேர்பவர்களுக்கும் பொருந்தும். 
 
இந்த திட்டத்தின் கீழ் பணிபுரியும் வீரர்களுக்கு முதல் ஆண்டில் ரூ.4.76 லட்சம் ஆண்டு ஊதியமும், 4வது ஆண்டில் 6.92 லட்சம் ஆண்டு ஊதியமாகவும் வழங்கப்படும். 4 ஆண்டுகளை முழுவதுமாக முடிக்கும் வீரர்கள், வீராங்கனைகளுக்கு சேவை நிதியாக தலா ரூ.11.7 லட்சம் வழங்கப்படும்.
 
இந்த திட்டத்தில் இணைபவர்களுக்கான வயது வரம்பு 18 முதல் 23 வரை என்று கூறப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு ராணுவத்தில் இருந்தபடியே பட்டப்படிப்பு படிப்பதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த திட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. 
 
இதனிடையே அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒடிசாவில் இளைஞர் தற்கொலை செய்துகொண்டார். ராணுவத்தில் சேர தன்னை தயார்படுத்தி வந்த நிலையில் இளைஞர் தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பாலசூர் பகுதியில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

13,216 புதிய பாதிப்பு; 23 மரணம் - மீண்டும் தலைத்தூக்கும் கொரோனா!