Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொரோனா இயற்கையான வைரஸ் இல்லை: ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது! மத்திய அமைச்சர் பேச்சால் சர்ச்சை!

Advertiesment
World
, வெள்ளி, 15 மே 2020 (08:41 IST)
கொரோனா வைரஸ் ஆய்வகத்தில் இருந்து பரப்பப்பட்ட செயற்கையான வைரஸ்தான் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் மாகாணத்தில் முதன் முதலாகக் கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ் இன்று உலகின் அனைத்து நாடுகளுக்கும் பரவி 43 லட்சம் பேருக்கு மேல் பாதித்துள்ளது. 3 லட்சம் பேர் பலியாகியுள்ளனர். இந்நிலயில் ஆரம்பம் முதலே சீனாதான் இந்த வைரஸை கண்டுபிடித்து உலகிற்குப் பரப்பியது என்கிற ரீதியிலேயே ட்ரம்ப் பேசி வருகிறார்.

மேலும் பல நாடுகளும் இந்த வைரஸ் தொற்றுக்கு சீனாதான் பொறுப்பேற்க வேண்டும் என குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியும் கொரோனா வைரஸ் இயற்கையான வைரஸ் இல்லை என்றும் அது ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட வைரஸ் என்றும் பேசியுள்ளார்.

சமீபத்தில் இதுகுறித்து பேசிய அவர் ‘ஒரு சிலருக்கு அறிகுறிகள் காணப்படாமல் இருப்பதால் பாதிப்பை கண்டறிவதில் சிக்கல் உள்ளது. இந்த சிக்கல்களுக்கு தீர்வு கண்டுபிடிக்கும் வரையில் நாம் அனைவரும் நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். இது இயற்கையான வைரஸ் இல்லை. செயற்கையாக உருவாக்கப்பட்டு ஆய்வகத்தில் இருந்து பரவியுள்ளது' எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உஷார்! ஆன்லைனில் மது விற்பதாக மோசடி! – டாஸ்மாக் விளக்கம்!