Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தடுப்பூசி போடாவிட்டால்... ரேஷன், பெட்ரோல், கியாஸ் கட்!!

தடுப்பூசி போடாவிட்டால்... ரேஷன், பெட்ரோல், கியாஸ் கட்!!
, வியாழன், 11 நவம்பர் 2021 (10:34 IST)
மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் மாவட்ட பொதுமக்களுக்கு மாவட்ட கலெக்டர் சுனில் சவான் அதிரடி உத்தரவு. 

 
இந்தியாவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு நீடித்து வருகிறது. இந்நிலையில் மக்களை கொரோனாவிலிருந்து காக்க தடுப்பூசி செலுத்தும் பணிகள் மாநிலம் முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. 
 
இருப்பினும் சிலர் தடுப்பூசியை போட அஞ்சுகின்றனர். இதனால் சில அதிரசி நடவடிக்கைகளை எடுத்து மக்களை தடுப்பூசி போடவைக்கும் கட்டாயத்தில் அதிகாரிகள் உள்ளனர். அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் மாவட்ட பொதுமக்களுக்கு மாவட்ட கலெக்டர் சுனில் சவான் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். 
 
அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகள், சமையல் கியாஸ் ஏஜென்சிகள் மற்றும் பெட்ரோல் பங்குகளில் தடுப்பூசி சான்றிதழ்களை சரிபார்க்க வேண்டும். குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியை போட்டுக் கொண்ட மக்களுக்கு மட்டுமே ரேஷன் பொருட்கள் மற்றும் எரி பொருட்களை வழங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முடிந்தது சூரசம்ஹாரம்; திருச்செந்தூரில் பக்தர்களுக்கு அனுமதி!