Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்வி கடன்கள் ரத்து செய்யப்படுவது உண்மையா? நிதியமைச்சர் விளக்கம்

Arun Prasath
செவ்வாய், 10 டிசம்பர் 2019 (08:59 IST)
பொருளாதார மந்தநிலை காரணமாக கல்வி கடன் ரத்து செய்யப்படுமா? என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.

மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த 6 மாதங்களில் கடும் சரிவை கண்டுள்ளது. இதனால் பொருளாதாரத்தில் மந்தநிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பொருளாதார மந்தநிலை காரணமாக வேலையின்மை 7.5 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாக சி.எம்.ஐ.இ. என்ற இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது.

இதனால் மத்திய அரசு கல்வி கடன்களை ரத்து செய்யப்போவதாக செய்திகள் பரவின. இந்நிலையில் இதற்கு மக்களவையில் விளக்கம் அளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,” 2017 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு மார்ச் வரை நிலுவையிலுள்ள கல்விக் கடன்களின் மொத்த மதிப்பு மிகவும் அதிகரித்துள்ளது. கல்வி கடன்களை வசூலிக்க வங்கிகள் சரியான அணுகுமுறையை கையாளவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. எனினும் கல்வி கடன்களை ரத்து செய்யும் திட்டம் எதுவும் இல்லை” என அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளி மாணவர்களுக்கு உண்டியல்.. சேமித்த பணத்தை புத்தகம் வாங்க அறிவுறுத்தல்..!

ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளது: அன்புமணி அதிர்ச்சி தகவல்..!

மத சண்டை வராமல் இருக்க பள்ளிகளில் பகவத் கீதை சொல்லித்தர வேண்டும்! - அண்ணாமலை!

ஊட்டி, கொடைக்கானல் செல்வோர் கவனிக்க.. நாளை முதல் இ-பாஸ் கட்டாயம்..!

ஆதரவாளர்களோடு சந்திப்பு.. அடுத்தடுத்து டெல்லி விசிட்! செங்கோட்டையன் திட்டம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments