புதுச்சேரியில் சாலையில் வாகனங்களை நிறுத்துவதற்கு தடை

Webdunia
வெள்ளி, 14 அக்டோபர் 2022 (16:06 IST)
புதுச்சேரி மாநிலத்தில்  சாலையில் வாகனங்களை நிறுத்துவதற்கு  தடை விதிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி யூனியனில், முதல்வர் என்.ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் , பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

இந்த நிலையில், புதுச்சேரியில் முக்கிய வணிகப் பகுதியான நேரு வீதியில்  நிறைய வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகள் உருவாகி வரும் நிலையில், அந்த நிறுவனங்கள் மற்றும் கடை ஊழியர்கள் தங்கள் வாகனங்களை சாலையில் நிறுத்தி வருகின்றனர்.

தற்போது தீபாவளியையொட்டி மக்கள் பலரும் கடைகளுக்கு முன் வாகனங்களை நிறுத்தி வருவதால் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது.

ALSO READ: புதுச்சேரியில் மின்வாரிய ஊழியர்கள் நடத்தி வந்த போராட்டம் வாபஸ்!

இதற்கு தீர்வுகாணும் வகையில்,  நிறுவனங்களின் உரிமையாளர்கள், பணியாளர்கள், மக்கள் சாலையில் தங்கள் வாகனங்கள் நிறுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதில், பழைய சிறைச்சாலையில் வாகனங்களை ரூ.100 கட்டணம் செலுத்திப் பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ்ஸின் 'எழுச்சிப் பயணம்' மீண்டும் தொடக்கம்: தேதி, இடத்தை அறிவித்த அதிமுக..!

ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு: திடீரென ஏற்பட்ட விபரீத நிகழ்வு என்ன?

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments