Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வீடுக்கட்ட பணம் இல்லை.. சிறுவனை கடத்திக் கொன்ற டெய்லர்! – மும்பையில் அதிர்ச்சி!

வீடுக்கட்ட பணம் இல்லை.. சிறுவனை கடத்திக் கொன்ற டெய்லர்! – மும்பையில் அதிர்ச்சி!

Prasanth Karthick

, செவ்வாய், 26 மார்ச் 2024 (13:12 IST)
மும்பையில் சிறுவனை கடத்தி பணம் கேட்டு மிரட்டி கொலை செய்த டெய்லரை போலீஸார் கைது செய்துள்ளனர்.



மும்பையின் தானே பகுதியை சேர்ந்தவர் முத்தாசிர். இவரது 9 வயது மகனான இபாதத் நேற்று முன் தினம் வீட்டின் அருகே உள்ள பள்ளி வாசலுக்கு தொழுகைக்காக சென்ற நிலையில் மாயமானான். சிறுவனை பெற்றோரும், அக்கம்பக்கத்தினரும் பல இடங்களில் தேடி வந்தனர்.

இந்நிலையில் முத்தாசிருக்கு ஒரு ரகசிய போன் கால் வந்துள்ளது. அதில் பேசிய நபர் சிறுவனை தான் கடத்தி வைத்திருப்பதாகவும் ரூ.23 லட்சம் கொடுக்காவிட்டால் சிறுவனை கொன்று விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். இதுகுறித்து முத்தாசிர் போலீஸில் புகார் அளித்துள்ளார்.


அதை தொடர்ந்து போலீஸார் சிறுவனை தேடி வந்த நிலையில் சிறுவனின் வீட்டிற்கு அருகே ஒரு சாக்குப்பை கிடந்துள்ளது. அதை திறந்து பார்த்தபோது அதில் சிறுவன் பிணமாக கிடந்துள்ளான். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், முத்தாசிருக்கு வந்த போன் காலை ட்ரேஸ் செய்து சல்மான் என்ற டெய்லரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

வீடு கட்ட பணம் இல்லாததால் சிறுவனை சல்மான் கடத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது. சிறுவனை கொலை செய்தது குறித்தும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மயிலாடுதுறை வேட்பாளர் அறிவிப்பு எப்போது? செல்வப்பெருந்தகை விளக்கம்..!