Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

11 ஆண்டுகளாக தொடரும் சோகம்… மும்பை இந்தியன்ஸுக்கு ஓப்பனிங் மேட்ச்ல ராசியே இல்லப்பா!

Advertiesment
ஹர்திக் பாண்ட்யா

vinoth

, திங்கள், 25 மார்ச் 2024 (14:46 IST)
ஐபிஎல் தொடரின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டிகளில் ஒன்றான மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் மோதும் போட்டி நேற்று குஜராத்தின் அகமதாபாத்தில் நடந்தது. இந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து விலகி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மீண்டும் வந்த ஹர்திக் பாண்ட்யா அந்த அணிக்கு கேப்டனாகவும் செயல்பட்டார். அவரின் அணிமாற்றத்தால் மும்பை மற்றும் குஜராத் ஆகிய இரு மாநில ரசிகர்களும் ஹர்திக் மேல் கோபமாக இருக்கின்றனர்.

இதனால் நேற்றைய தோல்விக்கு அவர் மேல் கடும் விமர்சனங்களை வைத்து வருகின்றனர். ஆனால் கடந்த 11 ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் வென்றதே யில்லை என்பதுதான் சோகமான வரலாறு. அந்த மோசமான சாதனையை நேற்றும் முறியடிக்க முடியவில்லை.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வன்மத்தை கக்கிட்டாங்க! நாய் ஓடியபோது ‘ஹர்திக்.. ஹர்திக்’ என கத்திய ஆடியன்ஸ்!