Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்மொழிக் கொள்கை என்பது மாணவர்களின் விருப்பத்திற்கு உட்பட்டது: அமைச்சர் தர்மேந்திர பிரதான்

Webdunia
திங்கள், 19 ஜூலை 2021 (13:51 IST)
மும்மொழி கொள்கை என்பது மாணவர்களின் விருப்பத்திற்கு உட்பட்டது என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
தமிழகம் உள்பட ஒருசில மாநிலங்களில் ஹிந்தி கட்டாயமாக திணிக்கப்படுவதாகவும் தமிழகத்தில் தமிழ் ஆங்கிலம் என்ற இரண்டு மொழிக்கொள்கை மட்டுமே கடைபிடிக்கப்படும் என்றும் கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் கூறிவருகின்றனர். தமிழக அரசின் நிலைப்பாடும் அதுவாகத்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சற்று முன் பாராளுமன்றத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் கூறியபோது, ‘எந்த மாநிலத்தின் மீதும் எந்த மொழியும் திணிக்க படாது என்றும் மும்மொழி கொள்கை என்பது மாநில அரசுகள் பிராந்தியங்கள் மற்றும் மாணவர்களின் விருப்பத்திற்கு உட்பட்டது என்றும் மக்களவையில் பாராளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதில் அளித்தால்
 
இதனை அடுத்து தமிழகத்தில் தமிழ் ஆங்கிலம் என்ற இரண்டு மொழிக் கொள்கையை தொடரும் என்பது உறுதியாகி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

சென்னை மண்ணடி காளிகாம்பாள் கோவில் அர்ச்சகருக்கு லுக் அவுட் நோட்டீஸ்.. என்ன காரணம்?

தனுஷ்கோடிக்கு செல்ல தடை.. ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் சுற்றுலா பயணிகள்

2024–25-ம் கல்வியாண்டில் சிபிஎஸ்இ-யில் தமிழ் பாட தேர்வு கட்டாயம்: பள்ளி கல்வித்துறை தகவல்

வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழை.. வானிலை எச்சரிக்கை..!

அந்த பத்து பேருக்கு.. பங்கம் செய்தார் அண்ணாமலை.. நடிகை கஸ்தூரி ட்விட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments