Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மும்மொழிக் கொள்கை என்பது மாணவர்களின் விருப்பத்திற்கு உட்பட்டது: அமைச்சர் தர்மேந்திர பிரதான்

மும்மொழிக் கொள்கை என்பது மாணவர்களின் விருப்பத்திற்கு உட்பட்டது: அமைச்சர் தர்மேந்திர பிரதான்
, திங்கள், 19 ஜூலை 2021 (13:51 IST)
மும்மொழி கொள்கை என்பது மாணவர்களின் விருப்பத்திற்கு உட்பட்டது என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
தமிழகம் உள்பட ஒருசில மாநிலங்களில் ஹிந்தி கட்டாயமாக திணிக்கப்படுவதாகவும் தமிழகத்தில் தமிழ் ஆங்கிலம் என்ற இரண்டு மொழிக்கொள்கை மட்டுமே கடைபிடிக்கப்படும் என்றும் கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் கூறிவருகின்றனர். தமிழக அரசின் நிலைப்பாடும் அதுவாகத்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சற்று முன் பாராளுமன்றத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் கூறியபோது, ‘எந்த மாநிலத்தின் மீதும் எந்த மொழியும் திணிக்க படாது என்றும் மும்மொழி கொள்கை என்பது மாநில அரசுகள் பிராந்தியங்கள் மற்றும் மாணவர்களின் விருப்பத்திற்கு உட்பட்டது என்றும் மக்களவையில் பாராளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதில் அளித்தால்
 
இதனை அடுத்து தமிழகத்தில் தமிழ் ஆங்கிலம் என்ற இரண்டு மொழிக் கொள்கையை தொடரும் என்பது உறுதியாகி உள்ளது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கருணாநிதி சிலை திறப்பிற்கு குடியரசு தலைவர் வருகை? – மு.க.ஸ்டாலின் தகவல்!