Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிதிஷ்குமார் கட்சி உடைகிறதா? புதிய கட்சியைத் தொடங்கினார் உபேந்திர குஷ்வாஹா

Webdunia
திங்கள், 20 பிப்ரவரி 2023 (20:21 IST)
பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியிலிருந்து புதிய கட்சி தொடங்குவதாக முன்னாள் மத்திய அமைச்சர்  உபேந்திர குஷ்வாஹா தெரிவித்துள்ளதை அடுத்து அக்கட்சி இரண்டாக உடைகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. 
 
பீகார் மாநிலத்தில் ஆளுங்கட்சியாக இருக்கும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர்  உபேந்திர குஷ்வாஹா என்பவர் திடீரென கட்சியிலிருந்து விலகி உள்ளார். 
 
நிதிஷ்குமார் மற்றும் தேஜஸ்வி யாதவ் ஆகிய இருவரின் நம்பிக்கைக்கு உரிய அரசியல் தலைவராக வலம் வந்து கொண்டிருந்த இவர் திடீரென கட்சி மீது அதிருப்தி அடைந்து முதல்வர் நிதிஷ்குமாரை விமர்சனம் செய்ய தொடங்கினார். 
 
கடந்த சில மாதங்களாக இந்த விமர்சனப் போக்கு நீடித்து வந்த நிலையில் அவர் தற்போது ஐக்கிய ஜனதா தளத்திலிருந்து விலகி உள்ளதாக அறிவித்துள்ளார். இதனை அடுத்து அவர் புதிய கட்சியை தொடங்கி உள்ளதால் ஐக்கிய ஜனதா தளம் இரண்டாக உடையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு நிறுத்திய தண்ணீரை பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தானுக்கு திருப்ப திட்டம்.. மோடி அதிரடி..!

டெல்லியில் ரயில்வே நிலத்தை ஆக்கிரமித்த வங்கதேசத்தினர்.. இடித்து தரைமட்டமாக்கியதால் பரபரப்பு..!

பஸ்ஸே வருவதில்லை.. கிளாம்பாக்கத்தில் பயணிகள் அவதி.. அரசின் விளக்கம் என்ன?

அதிபர் வேட்பாளரை தலையில் சுட்ட ஆசாமி! கொலம்பியாவில் அதிர்ச்சி! - வீடியோ வைரல்!

அதிக வ்யூஸ் பெறுவதற்காக டஸ்டிங் ஸ்ப்ரேயை வாயில் வைத்து..? - இளம்பெண்ணுக்கு நேரந்த சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments