Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நித்யானந்தா ஆசிரமம் இடித்துத் தரைமட்டம் ....அதிகாரிகள் தகவல் !

Webdunia
ஞாயிறு, 29 டிசம்பர் 2019 (10:20 IST)
குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் மாநிலத்தில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமம் நேற்று இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அகமதாபாத் நகரின் ஹதிஜன் என்ற பகுதியில் நித்யானந்தா நடத்தி வந்த  ஆசிரமத்தில் 2 சிறுமிகள் கடத்தப்பட்டதாக எழுந்த புகார் அடிப்படையில் நித்யானந்தா மீது போலீஸார் வழக்குப் பதிவு  செய்துள்ளனர். 
 
இந்த நிலையில் நித்யானந்தா, நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடு தப்பிச் சென்றதாக தகவல் வெளியானது. இதை மத்திய அமைச்சகம் மறுத்து வந்த நிலையில், நேற்று, மத்திய அரசு, வெளிநாட்டில் இருக்கும் நித்யானந்தாவை பிடித்து வர உள்ளதாகவும் அறிவித்தது.
 
இந்நிலையில், குஜராத்தில் சர்ச்சைக்குரிய பள்ளி நடத்திவரும் அறக்கட்டளையிடம் இருந்து சட்ட விரோதமாக குத்தைகைக்கு பெறப்பட்டுள்ளதாக ஆமதாபாத் நகர மேம்பாட்டு ஆணையத்துக்கு தகவல் வந்துள்ளது.
 
அதனடிப்படையில், ஆணைய அதிகாரிகள் நித்யானந்தாவின் ஆசிரமத்தை இடித்து தரைமட்டம் ஆக்கினர்.

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments