டெல்லி மருத்துவமனையில் அபிநந்தன் - நிர்மலா சீதாராமன் சந்திப்பு

Webdunia
சனி, 2 மார்ச் 2019 (17:41 IST)
பாகிஸ்தானில் இருந்து நேற்றிரவு சுமார் 9 மணிக்கு தாயகம் திரும்பிய அபிநந்தனுக்கு நாடே சிறப்பான வரவேற்பு கொடுத்தது. குடியரசு தலைவர், பிரதமர், மாநில முதல்வர்கள், கவர்னர்கள், அரசு அதிகாரிகள், அரசியல் கட்சி தலைவர்கள் பொதுமக்கள் என அனைத்து தரப்பினர்களும் அபிநந்தனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்
 
இந்த நிலையில் இன்று காலை விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவா முன்பு ஆஜாரான அபிநந்தன் அவரிடம் பாகிஸ்தானில் நடந்தது குறித்து விளக்கம் அளித்துள்ளார். பாகிஸ்தான் வசம் இருந்தபோது என்ன நடந்தது என்றும், பாகிஸ்தான் ராணுவத்தினர் தன்னிடம் நடந்து கொண்ட விதம் குறித்தும் தளபதியிடம் அபிநந்தன் விளக்கம் அளித்ததாக தெரிகிறது.
 
இதனையடுத்து டெல்லி மருத்துவமனையில் அபிநந்தனுக்கு மருத்துவ சோதனை செய்யப்பட்டது. இதற்காக அவர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரை பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார். நிர்மலா சீதாரமன், அபிநந்தன் சந்திப்பு குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டேன்ஸ் ஆடலாம்.. தெருவுல நடந்தால் விஜய்க்கு முட்டி வலிக்கும்!.. மன்சூர் அலிகான் ராக்ஸ்!...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

பிகாரில் வீசும் அதே அலை தமிழகத்திலும் வீசுகிறது: கோவையில் பிரதமர் மோடி பேச்சு

கருமுட்டையை உறைய வைத்து வேலையில் கவனம் செலுத்துங்கள்: ராம்சரண் மனைவியின் சர்ச்சை கருத்து..!

பிரதமர் மோடியின் காலில் விழுந்து ஆசி பெற்ற ஐஸ்வர்யா ராய்.. புகைப்படம் வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments