Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாவூத் இப்ராஹீம் குறித்து தகவல் அளித்தால் ரூ.20 லட்சம் சன்மானம்: என்ஐஏ அறிவிப்பு|

Webdunia
வியாழன், 1 செப்டம்பர் 2022 (16:02 IST)
நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹீம் குறித்து தகவல் அறிவித்தால் 20 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என தேசிய புலனாய்வு முகமை அறிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுடன் தாவூத் இப்ராஹிம் தொடர்பு வைத்திருப்பதாகவும் இந்தியாவுக்கு எதிராக பல தீவிரவாத செயல்களை செய்து வருவதாகவும் தாவூத் இப்ராஹிம் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது
 
மேலும் இந்தியாவில் செயல்படும் ஒரு சில நிறுவனங்கள் மூலம் ஆயுதங்கள் வெடிபொருட்கள் மற்றும் கள்ளநோட்டுகள் போன்ற குற்றச்செயல்களில் தாவூத் இப்ராஹீம் ஈடுபட்டு வருவதாகவும் இதுகுறித்த தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தி வருகிறது என்றும் கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் தாவூத் இப்ராகிம் மற்றும் அவரது கூட்டாளிகள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு 15 லட்சம் முதல் 20 லட்ச ரூபாய் வரை சன்மானம் வழங்கப்படும் என தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளதால் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஒரே இரவில் நான்கு கோவில்கள் உண்டியல் உடைப்பு- பல ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை

காட்டு யானை ரேஷேன் கடை கட்டிடத்தை உடைத்து கதவுகளை நொறுக்கி அட்டகாசம்!

அடுத்த கட்டுரையில்
Show comments