Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

19ம் நூற்றாண்டு கதையில் விக்ரம்! – பேன் இந்தியா படமாக்கும் பா.ரஞ்சித்!

vikram pa ranjith
, வியாழன், 1 செப்டம்பர் 2022 (12:15 IST)
நடிகர் விக்ரம் இயக்குனர் பா.ரஞ்சித்துடன் இணையும் படத்தை பேன் இந்தியா படமாக தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழில் மெட்ராஸ், காலா, கபாலி, சார்பட்டா உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் பா.ரஞ்சித். தற்போது இவரது இயக்கத்தில் ”நட்சத்திரங்கள் நகர்கிறது” வெளியாகி திரையரங்குகளில் ஓடி வருகிறது. விக்ரமின் கோப்ரா படமும் வெளியாகி ஓடி வருகிறது.

இந்நிலையில் அடுத்து விக்ரம், இயக்குனர் பா.ரஞ்சித் படத்தில் நடிக்க உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியானாலும் எந்த வகையான கதையை விக்ரமுக்கு பா.ரஞ்சித் தயார் செய்துள்ளார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

இந்நிலையில் இந்த படம் 19ம் நூற்றாண்டில் சுதந்திர போராட்ட காலக்கட்டத்தை சேர்ந்த கதை என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சமீபத்தில் பேசியுள்ள இயக்குனர் பா.ரஞ்சித் “19ம் நூற்றாண்டு காலக்கட்டத்தை சேர்ந்த கதை என்பதால் இதை உலகம் முழுவதும் எடுத்து செல்வோம்” என பேசியுள்ளார்.

இதனால் இந்த படம் பேன் இந்தியா படமாக உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்காக படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் தொடங்க உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹாலிவுட்டில் அறிமுகமாகும் அல்லு அர்ஜூன்