Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியை அறிவித்தார் ஜனாதிபதி

Webdunia
வியாழன், 13 செப்டம்பர் 2018 (19:57 IST)
தற்போது சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக இருப்பவர் தீபக் மிஸ்ரா. இவருடைய பதவிக்காலம் வரும் அக்டோபர் 2ஆம் தேதி முடிவடைகிறது. இந்த நிலையில் புதிய சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியை விரைவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் சற்றுமுன் புதிய தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் என்பவரை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் நியமனம் செய்துள்ளார். ரஞ்சன் கோகாய் வரும் அக்டோபர் 3ஆம் தேதி சுப்ரீம், கோர்ட் தலைமை நீதிபதியாக பதவியேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள ரஞ்சன் கோகாய் என்பவர் அசாம் மாநில முன்னாள் முதலமைச்சரின் மகன் என்பதும் முதல்வரின் மகனாக இருந்தபோதிலும் இவருக்கு பரம்பரை சொத்தாக கிடைத்த பழைய வீட்டைத் தவிர வேறு சொத்து இல்லை என்பதும், இவரது தீர்ப்புகள் சிறப்பானவை என்பதால் இனி நீதித்துறையில் நேர்மை கோலோச்சும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் தான் இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்.. 10வது முறையாக கூறும் டிரம்ப்.. நம்பத்தான் ஆளில்லை..!

குடும்பத்தோடு தலைமறைவாவேன், அல்லது உயிர் துறப்பேன்: வருத்தத்துடன் கூறிய ஜிகே மணி..!

இந்திய ஜெட் விமானம் வீழ்த்தப்பட்டதா? மறைமுகமாக பதில் கூறிய முப்படை தலைமை தளபதி..!

திமுகவை எதிர்ப்பதாக கட்சி தொடங்கியபோது கூறினீர்களே? கேள்விக்கு பதில் சொல்லாமல் போன கமல்..!

எனக்கு துணை முதல்வர் பதவி தருவதாக ஆதவ் அர்ஜூனா கூறினார்: சீமான் பேட்டி

அடுத்த கட்டுரையில்
Show comments