Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியை அறிவித்தார் ஜனாதிபதி

Webdunia
வியாழன், 13 செப்டம்பர் 2018 (19:57 IST)
தற்போது சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக இருப்பவர் தீபக் மிஸ்ரா. இவருடைய பதவிக்காலம் வரும் அக்டோபர் 2ஆம் தேதி முடிவடைகிறது. இந்த நிலையில் புதிய சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியை விரைவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் சற்றுமுன் புதிய தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் என்பவரை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் நியமனம் செய்துள்ளார். ரஞ்சன் கோகாய் வரும் அக்டோபர் 3ஆம் தேதி சுப்ரீம், கோர்ட் தலைமை நீதிபதியாக பதவியேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள ரஞ்சன் கோகாய் என்பவர் அசாம் மாநில முன்னாள் முதலமைச்சரின் மகன் என்பதும் முதல்வரின் மகனாக இருந்தபோதிலும் இவருக்கு பரம்பரை சொத்தாக கிடைத்த பழைய வீட்டைத் தவிர வேறு சொத்து இல்லை என்பதும், இவரது தீர்ப்புகள் சிறப்பானவை என்பதால் இனி நீதித்துறையில் நேர்மை கோலோச்சும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எந்த தமிழனும் தமிழ்நாட்டை உருவாக்கல.. RSS தேசபக்தர்களை உருவாக்கியது! - மகாராஷ்டிர ஆளுநர் சர்ச்சை பேச்சு!

அரசு பள்ளிகளில் அடுத்த ஆண்டு முதல் ஏஐ பாடத்திட்டம்: பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்

கருணாநிதி வைத்திருந்த அரசு ஊழியர் ஓட்டு வங்கியை ஸ்டாலின் இழந்து விட்டார் : ஆசிரியர் கூட்டமைப்பு

கோடை விடுமுறை எதிரொலி: முக்கிய ரயில்களில் கூடுதல் பெட்டிகள்.. தெற்கு ரயில்வே முடிவு

அமெரிக்காவில் உள்ள முக்கிய பூங்காவில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு: 3 பேர் பரிதாப பலி!

அடுத்த கட்டுரையில்
Show comments