Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இனி ஆதார் கார்டு இல்லாமல் பான் கார்டு இல்லை: ஜூலை 1 முதல் அதிரடி மாற்றம்..!

Advertiesment
பான் கார்டு

Mahendran

, வியாழன், 19 ஜூன் 2025 (16:43 IST)
வரி ஏய்ப்பை தடுக்கும் வகையிலும், அடையாள சரிபார்ப்பை வலுப்படுத்தும் நோக்குடனும், ஜூலை 1, முதல் புதிய பான் கார்டு பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய நேரடி வரிகள் வாரியம் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
 
புதிய விதிமுறைப்படி, அடுத்த ஆண்டு ஜூலை 1ஆம் தேதிக்கு பிறகு பான் கார்டுக்கு விண்ணப்பிக்கும் எவரும், செல்லுபடியாகும் ஆதார் எண்ணை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். அதுவே விண்ணப்ப செயல்பாட்டின்போது முக்கிய சரிபார்ப்பு ஆவணமாக செயல்படும். "டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் வரித்தாக்கலில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வரும் முயற்சியின் ஒரு பகுதி இது" என்று ஒரு மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
 
தற்போது வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் போன்ற ஆவணங்களை கொண்டு பான் கார்டு பெறலாம். ஆனால் இனி, வருமான வரித் துறையின் போர்ட்டல் வழியாக ஆதார் சரிபார்ப்பு மூலமே பான் விண்ணப்பிக்க முடியும்.
 
ஏற்கனவே பான் கார்டு வைத்திருப்பவர்கள், தங்கள் பான் எண்ணை டிசம்பர் 31, 2025க்குள் ஆதாரோடு இணைக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், ஜனவரி 2026 முதல் அவர்களின் பான் அட்டை செயல்படாது. இந்த காலக்கெடு ஏற்கனவே பலமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
இந்த மாற்றங்கள், நிதிச் சேவைகளில் வெளிப்படைத்தன்மையையும், வேகத்தையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்றிரவு 13 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம்..!