Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தியாவில் புதியவகை கொரோனா பரவியுள்ளதால்? மத்திய அரசு விளக்கம்!

இந்தியாவில் புதியவகை கொரோனா பரவியுள்ளதால்? மத்திய அரசு விளக்கம்!
, செவ்வாய், 22 டிசம்பர் 2020 (17:04 IST)
இங்கிலாந்து நாட்டில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது பரவிவரும் கொரோனா வைரஸ்ஸை விட படுதீவிரமாக பரவும் தன்மை கொண்டது என்றும் கூறப்பட்டு வருகிறது. இதனையடுத்து இங்கிலாந்து நாட்டிலிருந்து வரும் விமானங்களை தரையிறக்க பல நாடுகள் தடை செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இன்று வெளியான செய்தியின்படி இங்கிலாந்து நாட்டில் இருந்து டெல்லி வழியாக சென்னை வந்த ஒருவருக்கும் இங்கிலாந்து நாட்டிலிருந்து கொல்கத்தா வந்த இருவருக்கும் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி இருக்கும் புதிய வைரஸ் அறிகுறி தென்படுவதாக கூறப்பட்டது 
 
இந்த நிலையில் மத்திய அரசு இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது. புதிய வகை வைரஸ் இந்தியாவில் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ் குறித்த அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது
 
இதுகுறித்து நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி கே பாலு அவர்கள் கூறிய நிலையில் பிரிட்டனில் பரவி வரும் புதிய கொரோனா வைரஸ் இந்தியாவில் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதால் பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். மேலும் இங்கிலாந்தில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பரவலை தான் அதிகரித்துள்ளது என்றும், உருமாற்றம் காரணமாக நோயுடைய தீவிரத்தன்மையோ அல்லது இறப்பு விகிதமோ அதிகரிக்கவில்லை என்றும் நிதி ஆயோக்கின் சுகாதாரத்துறை உறுப்பினர் வி.கே. பால் தகவல் தெரிவித்துள்ளார்.   மத்திய அரசின் இந்த விளக்கத்தை அடுத்து இந்திய மக்களுக்கு நிம்மதி ஏற்பட்டுள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினியின் அரசியல் வருகையால் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுகவினர் பயம் - அமைச்சர் கருப்பணன்