Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

என்னை சந்தித்த அனைவரும் பரிசோதித்துக்கொள்ளுங்கள் - கொரோனா தொற்று உறுதி செய்த ரகுல் ப்ரீத் சிங்!

என்னை சந்தித்த அனைவரும் பரிசோதித்துக்கொள்ளுங்கள் -  கொரோனா தொற்று உறுதி செய்த ரகுல் ப்ரீத் சிங்!
, செவ்வாய், 22 டிசம்பர் 2020 (15:01 IST)
நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிற்கு கொரோனா தொற்று
 
சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸால் இதுவரை பல லட்சத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் இந்நோய் குறித்த விழிப்புணர்வை தொடர்ந்து மத்திய அரசு உத்தரவின் பேரில் அனைத்து மாநிலங்களிலும் ஏற்படுத்தி வருகின்றனர். இந்நோய் சுமார் ஒரு வருடகாலமாக மக்கள் ஊரடங்கில் வீட்டில் இருந்து வருகின்றனர்.
 
சாதாரண மக்கள் , முதல் பெரிய தொழிலதிர்கள் , திரை நட்சத்திரங்கள் உடன்பட பலரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் தற்போது நடிகை ரகுல் ப்ரீத் சிங் கொரோன தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். 
 
அந்த பதிவில், " எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை தெரிவிக்க விரும்புகிறேன். நான் என்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன். நான் நலமாக தான் இருக்கிறேன். நல்ல ஓய்விற்கு பின்னர் மீண்டும் படப்பிடிப்புகளில் கலந்துகொள்வேன். என்னை சந்தித்த அனைவரும் கொரோனா பரிசோதனை செய்யுங்கள். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் நன்றி என்று மன தைரியத்துடன் பதிவிட்டுள்ளார். இதையடுத்து ரசிகர்கள் தமன்னாவை போன்று நீங்களும் குணமாகி வீடு திரும்புவீர்கள் என ஆறுதல் கூறி வருகின்றனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தந்தையின் பாடலுக்கு டான்ஸ் ஆடிக் கலக்கிய வாரிசு –இணையத்தில் பரவும் வீடியோ!