Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய தலைமை தேர்தல் ஆணையர் அமித்ஷாவுக்கு வாழ்த்துக்கள்: திரிணாமுல் காங்கிரஸ் கிண்டல்..!

Siva
புதன், 19 பிப்ரவரி 2025 (07:59 IST)
புதிய தேர்தல் ஆணையர் இன்று பதவியேற்க இருக்கும் நிலையில், உள்துறை அமைச்சர் தான் புதிய தலைமை தேர்தல் ஆணையர் போல் தெரிகிறார் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையராக இருந்த ராஜீவ் குமார் நேற்று ஓய்வு பெற்ற நிலையில், ஞானேஷ் குமார் என்பவர் புதிய தலைமை தேர்தல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த நியமனத்திற்கு நேற்று குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து ஞானேஷ்குமார் இன்று பதவி ஏற்க உள்ளார்.

இந்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. சாகித் கோகாலே இது குறித்து கூறிய போது, "இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தான் இந்தியாவின் புதிய தலைமை தேர்தல் ஆணையர் போல் தெரிகிறார்" என கிண்டலாக விமர்சனம் செய்துள்ளார்.

அவருக்கு தனது வாழ்த்துக்கள் தெரிவித்த அவர், "அவருடைய திறமையின் கீழ், தேர்தல் ஆணையத்தை பாஜகவின் ஒரு பிரிவாக மாற்ற வாய்ப்பு உள்ளது" என்றும், "அவருடைய இலக்கு வெற்றி அகலமாக அடையும்" எனவும் கூறியுள்ளார். மேலும், "அவர் மீது நாடு நம்பிக்கை வைத்துள்ளது" என தெரிவித்துள்ளார்.

அவருடைய இந்த கிண்டலான கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments