Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்திய அளவில் ட்ரண்ட்டான இந்தி எதிர்ப்பு - #Stop_Hindhi_imposition

இந்திய அளவில் ட்ரண்ட்டான இந்தி எதிர்ப்பு - #Stop_Hindhi_imposition
, சனி, 1 ஜூன் 2019 (17:28 IST)
இந்திய அரசு மும்மொழிக் கொள்கையைத் திணிக்க இருப்பதாக எழுந்த செய்திகளை அடுத்து இந்தி எதிர்ப்பு ஹேஷ்டேக் சமூக வலைதளங்களி ட்ரண்ட் ஆகியுள்ளது.

பாஜக அரசு 2014 ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்றதும் புதிய கல்விக் கொள்கையை வடிவமப்பதற்கான திட்டக்குழுவை அமைத்தது. இந்த குழு 2016 ஆம் ஆண்டு தனது வரைவை மத்திய அரசிடம் அளித்தது. அந்த வரைவில் கல்வியில் தனியார் மயத்தை ஊக்குவித்தல், கல்லூரிகளுக்குத் தன்னாட்சி அதிகாரம் வழங்குவதன் மூலம் கல்லூரிக் கட்டணங்களை அதிகமாக்குதல், கல்வி சம்மந்தமாக கல்லூரிகள் எடுக்கும் விவகாரங்களில் அரசோ, நீதித்துறையோ தலையிடாது இருத்தல் போன்றவற்றை பரிந்துரை செய்தது.

இதனையடுத்து கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு சட்ட வரைவை முடித்து மத்திய அரசிடம் நேற்று ஒப்படைத்துள்ளது. அதில் ஒரு ஷரத்தாக மும்மொழிக் கொள்கை அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் இந்தி பேசும் மாநிலங்களில் இந்தி, ஆங்கிலம் மற்றும் இந்தி அல்லாத வேறு மொழி மற்றும் இந்திப் பேசாத மாநிலங்களில் தாய்மொழி, ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மும்மொழிகளும் கற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு உருவாகியுள்ளது. அரசியல் தலைவர்கள் பலரும் இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சமூக வலைதளங்களில் இந்தி திணிப்புக்கு எதிராக ஹேஷ்டேக் உருவாக்கியுள்ளனர் நெட்டிசன்கள் .#stop_Hindi_imposition எனும் அந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரண்ட் ஆகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கல்யாணம் பண்ணிக்கலாம்.. ஆனா அதுக்கு முன்னாடி – இளம்பெண்ணை ஏமாற்றிய மாணவர்