Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெதர்லாந்து ராஜா-ராணி இந்தியா வருகை! கேரளாவிற்கும் வருகை தர திட்டம்

Webdunia
திங்கள், 14 அக்டோபர் 2019 (08:00 IST)
நெதர்லாந்து நாட்டின் மன்னர் வில்லியம் அலெக்சாண்டர் மற்றும் ராணி மாக்ஸிமா ஆகியோர் நேற்று இந்தியாவிற்கு வருகை தந்துள்ளனர். ஐந்து நாள் பயணமாக இந்தியா வருகை தந்துள்ள நெதர்லாந்து மன்னர் மற்றும் ராணியை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வரவேற்றார்.
 
இன்று டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிடோரை மன்னரும் ராணியும் சந்தித்து பேசுகின்றனர். இதனையடுத்து மும்பை செல்லும் நெதர்லாந்து மன்னர் மற்றும் ராணி, கேரளாவிற்கும் வருகை தர திட்டமிட்டுள்ளனர். இந்திய பயணத்தை முடித்துவிட்டு மன்னரும் ராணியும் வரும் வெள்ளியன்று நாடு திரும்புவார்கள் என்று கூறப்படுகிறது
 
இந்தியாவும் நெதர்லாந்தும் பல வருடங்களாக இருதரப்பு வணிகத்தில் ஈடுபட்டுள்ளன். இந்தியாவில் அதிக முதலீடு செய்துள்ள நாடுகளில் நெதர்லாந்து தற்போது ஐந்தாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இன்று டெல்லியில் நடைபெறும் தொழிலதிபர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுடன் நெதர்லாந்து மன்னர் மற்றும் ராணி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதை அடுத்து நெதர்லாந்தின் முதலீடு இந்தியாவில் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பீகார் வாக்காளர் திருத்தம் நிறைவு! 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்!

பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 31 பேர் பலி, 147 பேர் படுகாயம்.. சேத விவரங்கள்!

துபாய் ஷேக்கிற்கு பாலியல் பார்ட்னர் வேண்டும்.. மாணவியுடன் சாமியார் பேசிய வாட்ஸ் அப் உரையாடல்..!

எண்ணூர் அனல்மின் நிலையத்தில் பயங்கர விபத்து: 9 தொழிலாளர்கள் பலி.. பிரதமர் நிவாரணம் அறிவிப்பு

ஹமாஸ் அமைப்புக்கு 4 நாட்கள் கெடு விதித்த டிரம்ப்.. விளைவுகள் கடுமையாக இருக்கும் என எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments