Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெதர்லாந்து ராஜா-ராணி இந்தியா வருகை! கேரளாவிற்கும் வருகை தர திட்டம்

Webdunia
திங்கள், 14 அக்டோபர் 2019 (08:00 IST)
நெதர்லாந்து நாட்டின் மன்னர் வில்லியம் அலெக்சாண்டர் மற்றும் ராணி மாக்ஸிமா ஆகியோர் நேற்று இந்தியாவிற்கு வருகை தந்துள்ளனர். ஐந்து நாள் பயணமாக இந்தியா வருகை தந்துள்ள நெதர்லாந்து மன்னர் மற்றும் ராணியை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வரவேற்றார்.
 
இன்று டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிடோரை மன்னரும் ராணியும் சந்தித்து பேசுகின்றனர். இதனையடுத்து மும்பை செல்லும் நெதர்லாந்து மன்னர் மற்றும் ராணி, கேரளாவிற்கும் வருகை தர திட்டமிட்டுள்ளனர். இந்திய பயணத்தை முடித்துவிட்டு மன்னரும் ராணியும் வரும் வெள்ளியன்று நாடு திரும்புவார்கள் என்று கூறப்படுகிறது
 
இந்தியாவும் நெதர்லாந்தும் பல வருடங்களாக இருதரப்பு வணிகத்தில் ஈடுபட்டுள்ளன். இந்தியாவில் அதிக முதலீடு செய்துள்ள நாடுகளில் நெதர்லாந்து தற்போது ஐந்தாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இன்று டெல்லியில் நடைபெறும் தொழிலதிபர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுடன் நெதர்லாந்து மன்னர் மற்றும் ராணி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதை அடுத்து நெதர்லாந்தின் முதலீடு இந்தியாவில் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments