Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரூ.100-க்கு மேல ஒத்த பைசா கூட செல்லாது: அரசு கரார்!

ரூ.100-க்கு மேல ஒத்த பைசா கூட செல்லாது: அரசு கரார்!
, திங்கள், 21 ஜனவரி 2019 (18:55 IST)
இந்திய அரசின் 2,000, 500 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளை மக்கள் பயன்படுத்த நேபாள அரசு திடீர் தடை விதித்தது. இதனை இப்போது நேபாள மத்திய வங்கி உறுதிப்படுத்தி உள்ளது. ஆனால், 100 ரூபாய் நோட்டுகளை மட்டும் பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.
 
கடந்த 2016 ஆம் ஆண்டு, மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அமல்படுத்திய போது நேபாளத்தில் கோடிக்கணக்கில் 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் தேங்கிவிட்டன. இதனை இதுவரை மத்திய அரசு நேபாள ரிசர்வ் வங்கியிடம் இருந்து திரும்ப பெறவில்லையாம்.  
 
இதனால், கடும் அதிருப்தியில் உள்ள நேபாள அரசு உயர்ந்த மதிப்புள்ள நோட்டுகளான ரூ.2000, ரூ.500 மற்ரும் ரூ.200-க்கு தடை விதித்து ரூ.100 மட்டும் பயன்படுத்தும்படி அறிவுறுத்தியுள்ளது. 
 
அரசு மற்றும் வங்கியின் இந்த அறிவிப்பால் நேபாளத்தில் உள்ள வணிக நிறுவனங்கள், வங்கிகள், சுற்றுலா பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட வாய்ப்பு அதிகமாக உள்ளதாக தெரிகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இறங்கு முகத்தில் சீனா பொருளாதாரம்: மந்தநிலைக்கு காரணம் என்ன?