Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருணை மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு மறுதேர்வு! நீட் தேர்வு வழக்கில் அதிரடி முடிவு..!

Mahendran
வியாழன், 13 ஜூன் 2024 (11:20 IST)
நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கருணை மதிப்பெண் பெற்ற 1563 மாணவர்களுக்கு வரும் 23ஆம் தேதி மறு தேர்வு நடத்தப்படும் என்றும் வரும் 30ஆம் தேதிக்குள் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் உச்சநீதிமன்றத்தில் தேசிய தேர்வு முகமை தகவல் தெரிவித்துள்ளது.
 
மேலும் நீட் தேர்வின் புனித தன்மையில் எந்தவித சமரசமும் செய்யப்படவில்லை என்றும் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம், மோசடி, விடைத்தாள்களை சேதப்படுத்துதல் உள்ளிட்ட காரியங்களில் ஈடுபட்ட 63 மாணவர்கள் பிடிபட்ட நிலையில் அவர்கள் மீதான புகார்களை விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் உச்சநீதிமன்றத்தில் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
 
மேலும் 1563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் அளித்தது குறித்து விசாரிக்க 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் அந்த குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் அந்த மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்தப்படும் என்றும் உச்சநீதிமன்றத்தில் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
 
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜயகாந்த் பிறந்தநாளை குறிவைத்த விஜய்! மதுரை மாநாட்டை ஒத்திவைக்க போலீஸ் அழுத்தம்! - தவெக முடிவு என்ன?

12,000 ஊழியர்கள் பணி நீக்கம் அறிவிப்பு: டிசிஎஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 28,148 கோடி சரிவு!

காரை ஏற்றி இளைஞர் கொலை! சரணடைந்த திமுக பிரமுகரின் பேரன்! - வாக்குமூலத்தில் சொன்னது என்ன?

என்ன பண்றது கஷ்டமாதான் இருக்கு..! 15 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்தது குறித்து Microsoft CEO!

இந்தியாவுக்கு 25% வரி விதிப்பேன்: மீண்டும் மிரட்டிய டிரம்ப்..!

அடுத்த கட்டுரையில்
Show comments