நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

Mahendran
வெள்ளி, 17 மே 2024 (17:38 IST)
சமீபத்தில் நடந்த நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்த விவகாரம் பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் இதனால் தேர்வு முடிவுகளை வெளியிட தடை இல்லை என உச்ச நீதிமன்றம் சற்று முன் முக்கிய உத்தரவு ஒன்றை பரப்பி உள்ளது.

நீட் தேர்வு மே ஐந்தாம் தேதி நடைபெற்ற நிலையில் இந்த தேர்வை லட்சக்கணக்கான மாணவர்கள் எழுதினார்கள். இந்த நிலையில் பீகார் ராஜஸ்தான் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்து முறைகேடு நடந்துள்ளதாக கூறப்பட்ட நிலையில் இது குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. மேலும் இந்த விவகாரத்தால் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட எந்த ஒரு தடையும் இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும் வினாத்தாள் கசிந்த வழக்கு கோடை விடுமுறைக்கு பிறகு ஜூலை மாதம் விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் இருக்கும் சிக்கல்!.. சமாளிப்பாரா செங்கோட்டையன்!.. ஒரு பார்வை...

திருமணத்திற்கு மறுத்த ஆசிரியை வெட்டி கொலை.. சட்டம் - ஒழுங்கை காப்பாற்றுங்கள்: அன்புமணி கோரிக்கை

4 ஆண்டுகளாக பங்குச்சந்தையில் வர்த்தகம்.. ரூ.35 கோடி ஏமாந்த 72 வயது முதியவர்..!

'டிக்வா' புயல் எச்சரிக்கை: நாளை 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்'!

செங்கோட்டையனை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்: விஜய் வெளியிட்ட அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments