Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் தேர்வுக்கு முந்தைய நாளில் மாணவி மரணம்.. கோட்டா என்பது பயிற்சி நகரமா? பலி நகரமா?

Siva
ஞாயிறு, 4 மே 2025 (12:31 IST)
இன்று  நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற இருக்குஜ்  நிலையில், நேற்று நீட் தேர்வு பயிற்சி பெற்ற மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோட்டா என்ற ஊர், நீட் தேர்வு பயிற்சிக்கு புகழ் பெற்றது என்பதால், இந்த ஊரில் உள்ள பயிற்சி மையத்துக்கு நாட்டின் பல பகுதிகளில் இருந்து வந்து மாணவ, மாணவிகள் பயிற்சி பெறுகின்றனர்.
 
இந்த நிலையில் இன்று மதியம் 2 மணிக்கு நீட் தேர்வு தொடங்க இருக்கும் நிலையில், நீட் தேர்வு பயிற்சி மாணவி ஒருவர் நேற்று உயிரிழந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
நீட் தேர்வு பயம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படும் நிலையில், அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாகவும், பரிசோதனை முடிவுக்கு பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 
கோட்டாவில் பயிற்சி பெற்று வரும் நீட் தேர்வு பயிற்சி மாணவர்கள் இதுவரை ஒரே ஆண்டில் 14 பேர் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இனி 2 முறை பொதுத்தேர்வு! - சிபிஎஸ்இ நிர்வாகம் முடிவு!

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பம் கடைசி தேதி திடீர் மாற்றம்.. என்ன காரணம்?

முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூரில் விஜய் போட்டியா? தேர்தல் ஆய்வாளர் வம்சி பேட்டி..!

ஆந்திராவில் கணவனை கொலை செய்த மனைவி வழக்கில் திடுக்கிடும் தகவல்.. 8 பேர் கைது.

அபிநந்தனை கைது செய்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரி சுட்டுக்கொலை.. சுட்டது யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments