Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பஞ்சாப் காங்கிரஸின் தலைவர் ஆகிறாரா சித்து? உட்கட்சி பூசல் எதிரொலி

பஞ்சாப் காங்கிரஸின் தலைவர் ஆகிறாரா சித்து? உட்கட்சி பூசல் எதிரொலி
, வியாழன், 15 ஜூலை 2021 (16:23 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சித்து பஞ்சாப் மாநில காங்கிரசின் முதல்வராக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

பஞ்சாப் மாநிலத்தில் அதிகரித்துள்ள மின்வெட்டு பிரச்சனை மிகப்பெரிய அளவில்  விவாதப் பொருளாகியுள்ளது. இதை முன்னிட்டு முதல்வர் மீது அந்தக் கட்சியின் முக்கியப் பிரமுகரும் முன்னாள் ஒன்றிய அமைச்சருமான நவ்ஜோத் சிங் சித்து குற்றம்சாட்டி பரபரப்பைக் கிளப்பினார். அவருக்கு கட்சியினர் மத்தில் ஆதரவு எழுந்ததை அடுத்து முதல்வர் அம்ரீந்தர் சிங்குக்கும் சித்துவுக்கும் இடையே உட்கட்சி மோதல் எழுந்துள்ளது.

இதை தீர்க்க மூன்று பேர் கொண்ட குழுவை சோனியா காந்தி அமைத்துள்ளார். அந்த குழு இப்போது சமாதான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதையடுத்து சித்து பஞ்சாப் காங்கிரஸின் தலைவராக அறிவிக்கப்பட வாய்ப்பிள்ளதாக சொல்லப்படுகிறது. அடுத்த ஆண்டு பஞ்சாப்பில் தேர்தல் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தென்னாப்பிரிக்க கலவரத்தில் பாதிக்கப்படும் தமிழர்கள்…நடவடிக்கை எடுக்க அன்புமணி வலியுறுத்தல்!