தேசிய கபடி வீராங்கனை தற்கொலை.. தலைமறைவான கணவரை தேடும் போலீசார்..!

Mahendran
செவ்வாய், 9 டிசம்பர் 2025 (14:31 IST)
மகாராஷ்டிராவின் நாக்பூரில், தேசிய அளவிலான கபடி வீராங்கனை கிரண் சூரஜ் தாடே  தனது கணவர் உறுதியளித்தபடி வேலை வாங்கி தராததால் தற்கொலை செய்து கொண்டார்.
 
நிதி நெருக்கடியில் இருந்த கிரண், 2020ஆம் ஆண்டு ஸ்வப்னில் ஜெய்தேவ் லாம்ப்பரே என்பவரை திருமணம் செய்தார். வேலை வாங்கி தருவதாக உறுதியளித்த ஸ்வப்னில், பின்னர் காலதாமதம் செய்ததுடன், கிரணை மனரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தியுள்ளார். இதனால் கிரண் கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டிற்கு சென்றார்.
 
அச்சுறுத்தல்கள் தொடர்ந்ததால், கிரண் விவாகரத்து மனு தாக்கல் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த மன உளைச்சலில், டிசம்பர் 4ஆம் தேதி விஷம் அருந்திய கிரண், மூன்று நாட்களுக்கு பிறகு உயிரிழந்தார். 
 
தற்கொலைக்கு தூண்டியதாகக் கணவர் ஸ்வப்னில் மீது வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறை, தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேசிய கபடி வீராங்கனை தற்கொலை.. தலைமறைவான கணவரை தேடும் போலீசார்..!

வந்தே மாதரம் விவாதம்.. பிரியங்கா காந்திக்கு பதிலடி கொடுத்த அமித்ஷா..!

தமிழ்நாட்டை போலவே புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும்.. விஜய் ஆவேசம்,..

SIR பணியை தடுக்கும் மாநிலங்களில் காவல்துறையின் பொறுப்பை நீதிமன்றமே எடுத்து கொள்ளும்: சுப்ரீம் கோர்ட்

சோழர் காலத்து கோவிலில் திருமணம் செய்ய தடை.. அதிக விவாகரத்து காரணமா?

அடுத்த கட்டுரையில்